Published : 19 Dec 2018 03:39 PM
Last Updated : 19 Dec 2018 03:39 PM
18 வயதான ஏஞ்சல், சிறார் தடுப்புக்காவலிலிருந்து தப்பிக்கிறாள். ஏஞ்சலின் திட்டம் எளிமையானது. குழந்தைகள் பராமரிப்பில் இருக்கும் தனது தங்கையை அழைத்துக் கொள்வது, ஒரு துப்பாக்கியை வாங்குவது, தனது அம்மாவை கொலை செய்த தந்தையை பழிவாங்குவது, இழந்த வாழ்க்கையை மீட்பது. சூடான்ஸ் சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழா விருதுகளைப் பெற்ற படம்.
படத்தின் ட்ரெய்லர்
ஆணையும் பெண்ணையும் ஒப்புக் கொள்ளும் சமூகம், பெண்ணாக மாறும் ஆணை சரியாக கையாள்வதில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது Nagarkirtan. வங்காளத்தில் உளள கிராமத்தில் வளர்பவன் பரிமால். ஆண் உடலில் சிக்கிக் கொண்ட பெண்ணாய் தன்னை உணரும் பரிமால், கொல்கத்தா சென்று பெண்ணாய் மாறி, 'புடி' ஆகிறாள். பின்னர், அவள் மனம் விரும்பும் மது என்னும் இளைஞனைச் சந்திக்கிறாள். இசைக் கலைஞனான மதுவோடு 'புடி' சேர்வதை மாற்றுப் பாலினத்தவர் மட்டுமன்றி பாலினம் மாறியவர்களுமே ஒப்புக் கொள்ளாத நிலையில், இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓடுகிறார்கள். ஓட்டத்தின் முடிவு என்ன? அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை என்ன? வெள்ளித்திரையில்!
படத்தின் ட்ரெய்லர்
உலக சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த படம். ரியோவில் உள்ள சேரிப் பகுதியில் இரண்டு சிறுவர்கள் வளர்கிறார்கள். ஒருவனுக்கு புகைப்படக் கலைஞன் ஆக முயற்சிக்கிறான். மற்றொருவன் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் ஆகிறான். இருவரும் கடைசியில் என்ன ஆவார்கள்? உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றது.
படத்தின் ட்ரெய்லர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT