Published : 10 Nov 2018 03:14 PM
Last Updated : 10 Nov 2018 03:14 PM
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ’சர்கார்’ திரைப்படம் கடந்த செவ்வாய்க்கிழமை தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியானது.
திரைப்படத்தில், அரசு மக்களுக்கு தரும் இலவசப் பொருட்களை கொச்சைப்படுத்தியிருப்பதாகவும், வில்லிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் எனக் கூறப்படும் ‘கோமளவல்லி’ பெயர் வைத்தும் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. இது அதிமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
’சர்கார்’ திரைப்படக் குழுவினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை உட்பட பல மாவட்டங்களில் ’சர்கார்’ திரையிடப்படும் திரையரங்குகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பேனர்களைக் கிழித்தனர்.
இப்போராட்டம் தீவிரமானதைத் தொடர்ந்து, ‘சர்கார்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியிருக்கிறது படக்குழு. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் வரும் காட்சி, வரலட்சுமியின் பெயரை உச்சரிக்கும் காட்சி ஆகியவை இல்லாமல் தமிழகம் முழுவதும் ‘சர்கார்’ திரையிடப்பட்டு வருகிறது.
இலவசங்களைத் தீயில் போடுவது தான் பெரும் சர்ச்சையானது. இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் வீட்டிலிருந்த லேப்-டாப், ஃபேன், கிரைண்டர் ஆகியவற்றைத் தீயில் போடுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளத்தை ஆட்கொண்டு வருகிறது.
அவற்றில் சில வீடியோக்கள் உண்மையில் கோபத்தை வெளிப்படுத்துவதாகவும் சில வீடியோக்கள் சிரிப்பை வரவழைப்பதாகவும் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT