Published : 11 Nov 2018 11:52 AM
Last Updated : 11 Nov 2018 11:52 AM

தோனி இந்த நாட்டை ஆள்வதைக் காண காத்திருக்கிறேன்: விக்னேஷ் சிவன்

தோனி ஒருநாள் இந்த நாட்டை ஆள்வதைக் காண காத்திருக்கிறேன் என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர் இயக்குநர் விக்னேஷ் சிவன். ஐபிஎல் 2018-ன் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றபோது, அனைவரும் தோனியைப் புகழ்ந்து தள்ளினர்.

விக்னேஷ் சிவன் ஒருபடி மேலே போய், “தோனி, என்றாவது ஒருநாள் இந்தியாவின் பிரதமரானால் எப்படியிருக்கும்... மிகச்சிறந்த தலைவர், மிகச்சிறந்த மனிதர். எத்தனை வருடங்கள் ஆனாலும், தன் மீது ஒரு புகார் கூட இல்லாத தூயவர்.

அவர் இன்னும் மிகப்பெரிய அளவில் வரவேண்டும். எதிர்காலத்தில் மிகச்சிறந்த விஷயங்களைச் செய்ய வேண்டும். விளையாட்டில் மட்டுமல்ல, நாட்டுக்காகவும்” என ட்விட்டரில் தெரிவித்தார்.

அதன்பிறகு, மே.இ.தீவுகள், ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து தோனி நீக்கப்பட்டபோது, “இதயம் நொறுங்கியது. தலைவன் தோனி இல்லாமல் ஒரு டி20 அணியா? மோசமான அணித்தேர்வு குழு. பிசிசிஐ, உங்களை ஆண்டவன் தான் காப்பாற்றணும். தலைவன் தோனி இல்லாமல் ஆணியக்கூட புடுங்க முடியாது. தெரிந்து கொள்ளுங்கள்” என்று கொதித்தெழுந்தார்,

இந்நிலையில், தோனியை நேரடியாகச் சந்தித்துள்ளார் விக்னேஷ் சிவன். அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தோனியைக் காண வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. வாழ்க்கையிலேயே சந்தோஷமான, மிகவும் திருப்தியான தருணம் இது. இந்த தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த கடவுளுக்கு நன்றி. அவர் ஒருநாள் இந்த நாட்டை ஆள்வதைக் காண காத்திருக்கிறேன். #என்னுடைய_கனவு” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x