Published : 08 Nov 2018 01:26 PM
Last Updated : 08 Nov 2018 01:26 PM

2.0 குறித்து வைரலாகும் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘2.0’ படம் குறித்த ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட், சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. நீண்ட வருடங்களாக இப்படம் தயாரிப்பில் இருக்கிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு தொடங்கிய கிராபிக்ஸ் பணிகளை, சில நாட்களுக்கு முன்பு தான் முடித்து படத்துடன் இணைத்திருக்கிறார்கள்.

படத்தின் இசை, டீஸர், ட்ரெய்லர் என சமூக வலைதளத்தில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இப்படத்துக்கு கிராபிக்ஸ் காட்சிகளை இணைக்கும் முன்பே பின்னணி இசையை முடித்துக் கொடுத்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

பின்பு, கிராபிக்ஸ் காட்சிகளை இணைத்தவுடன் இன்னும் கொஞ்சம் இசையை மெருகேற்றலாம் என்று மீண்டும் பணிபுரிந்திருக்கிறார். தற்போது அப்பணிகளையும் முடித்து மிக்ஸிங் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளுக்கு இடையே ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் “2.0 படத்தின் 6-வது ரீலுக்கான மிக்ஸிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஓ மை காட், எமோஷனல் மற்றும் சயின்ஷ் பிக்‌ஷன் காவியம்” என்று பதிவிட்டு இருக்கிறார். இப்பதிவு பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

ஏனென்றால், ஒரு படத்தின் பணிகளுக்கு இடையே ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்திருப்பது இதுவே முதன் முறையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x