Published : 06 Nov 2018 02:53 PM
Last Updated : 06 Nov 2018 02:53 PM

விஸ்வரூபமாய் தெரிந்தார் விஜய்: பாடலாசிரியர் விவேக்

‘சர்கார்’ படத்தில் விஸ்வரூபமாய் விஜய் சார் தெரிந்தார் எனத் தெரிவித்துள்ளார் பாடலாசிரியர் விவேக்.

விஜய் நடிப்பில் இன்று (நவம்பர் 6) உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ள படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கும் விவேக், இன்று காலை ரசிகர்களுடன் முதல் காட்சி பார்த்தார். படம் முடிந்த பிறகு பேசிய அவர், “ரொம்ப சந்தோஷமாக இருந்தது. விஜய் சார் ரசிகர்கள் கொடுத்த மரியாதை, என்னையும் படத்தையும் அவர்கள் கொண்டாடிய விதம் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது.

ரொம்ப நேர்மையான, இந்தக் காலகட்டத்துக்குத் தேவையான ஒரு கதையை எடுத்து நேர்மையாகச் சொல்லியிருக்கிறார் முருகதாஸ் சார். அதை படத்தில் இந்த அளவுக்குத் தக்கவைக்க முடியுமா என்று தோன்றும் அளவுக்கு விஸ்வரூபமாய்த் தெரிந்தார் விஜய் சார். அவர் மட்டுமே இந்தப் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். அந்த அளவுக்கு சூப்பர் பவராக அவர் ஆகியிருக்கிறார் என்பது தெரிந்தது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x