Published : 24 Nov 2018 08:42 AM
Last Updated : 24 Nov 2018 08:42 AM
ரூ. 1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை என நடிகர் விஷாலுக்கு எதிராக தொரடப்பட்ட வழக்கு விசாரணையை எழும்பூர் நீதிமன்றம் டிச.11-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
நடிகர் விஷால் ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை எனக் கூறி விசாரணைக்கு ஆஜ ராகுமாறு சேவை வரித் துறை யினர் கடந்த 2016 முதல் பலமுறை சம்மன் அனுப்பியும் விஷால் ஆஜராகவில்லை.
இதையடுத்து விஷாலுக்கு எதிராக சேவை வரித் துறை சார் பில் சென்னை எழும்பூர் பொரு ளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கெனவே நடிகர் விஷால், நீதிபதி மலர்மதி முன்பாக ஆஜராகியிருந்தார். அப்போது இந்த வழக்கை எதிர்கொள்ளத் தயார் என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஷால் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் டிச.11-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT