Published : 09 Nov 2018 08:17 PM
Last Updated : 09 Nov 2018 08:17 PM

தன் தலைவனை திரையில் மட்டுமே தேடும் சமூகம்?- சி.வி.குமார் ஆதங்கம்

ஒரு திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்க்கத் தெரியாத ஒரு சமூகம் தன் பிரச்சினைகளுக்கான தீர்வை , தன் தலைவனை திரையில் மட்டுமே தேடும். அப்படிப்பட்ட ஓரு சமூகத்தையே இங்கு தொடர்ந்து கட்டமைத்து கொண்டிருக்கிறார்கள் அனைவரும் என்று தயாரிப்பாளரும், இயக்குநருமான சி.வி.குமார் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'சர்கார்' திரைப்படத்தில், ஆளும் அரசுக்கு எதிரான கருத்துகள் தொடர்பாக சர்ச்சை வெடித்தது. தொடர்ந்து படத்துக்கு எதிராக ஒரு தரப்பு போராட்டம் மேற்கொண்டது. 'சர்கார்' பேனர்கள் கிழிக்கப்பட்டு ரசிகர்கள் சிலரும் திரையரங்கிலிருந்து விரட்டப்பட்டனர்.

இதையடுத்து சர்ச்சைக்குரிய கருத்துகள் படத்திலிருந்து நீக்கப்பட்டன. படம் மறு தணிக்கைக்குச் சென்று சான்றிதழும் பெற்றது. படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி நீதிமன்றம் சென்றுள்ளார்.

இந்நிலையில் 'சர்கார்' படத்துக்கும், அதிலிருந்த கருத்துகளுக்கு தமிழ் திரையுலகமே ஆதரவு தெரிவித்து நிற்கிறது. பல நட்சத்திரங்கள் ட்விட்டரில் 'சர்கார்' படத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், தயாரிப்பாளரும் இயக்குநருமான சி.வி.குமார், ''ஒரு திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்க்க தெரியாத ஒரு சமூகம் தன் பிரச்சினைகளுக்கான தீர்வை , தன் தலைவனை திரையில் மட்டுமே தேடும். அப்படிப்பட்ட ஓரு சமூகத்தையே இங்கு தொடர்ந்து கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள் அனைவரும்....' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x