Last Updated : 22 Nov, 2018 06:20 PM

 

Published : 22 Nov 2018 06:20 PM
Last Updated : 22 Nov 2018 06:20 PM

சாகும் வரை காதலிப்பேன்: திருமண நாளன்று ஷில்பா ஷெட்டி நெகிழ்ச்சி

ஷில்பா ஷெட்டி தன் திருமண நாளில் கணவர் ராஜ் குந்த்ராவை வாழ்த்தி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

கணவருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்த ஷில்பா ஷெட்டி, தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "உன் ஆச்சரியங்கள், செயல்கள், பெரிய மனதுக்கு ஈடாக என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பொருத்தமான, சரியான ஜோடி. அதற்கு நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். சாகும் வரை உன்னைக் காதலிப்பேன். அதற்குப் பிறகு வாழ்க்கை இருக்குமென்றால் அப்போதும் காதலிப்பேன். மகிழ்ச்சியான 9-வது திருமண நாள் வாழ்த்துகள் கணவரே" என்று குறிப்பிட்டுள்ளார். 

இருவரும் தற்போது மாலத்தீவுகளில் தங்கள் திருமண நாளைக் கொண்டாடி வருகின்றனர். குந்த்ராவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியை வாழ்த்திப் பதிவிட்டுள்ளார். 

2009-ல் இவர்களுக்குத் திருமணம் ஆனது. இவர்களுக்கு வியான் என்கின்ற 6 வயது மகன் இருக்கிறார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x