Published : 02 Oct 2018 03:24 PM
Last Updated : 02 Oct 2018 03:24 PM

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்துகொள்ளாதது ஏன்?

'சர்கார்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்து கொள்வார் என்று செய்திகள் வெளியாகின. இதற்கு ரஜினி தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (அக்டோபர் 2) பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

‘சர்கார்’ படம் முழுக்க அரசியல் பின்னணியைக் கொண்ட படமாகும். ‘ஒரு விரல் புரட்சி’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அதன் வரிகள் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் பின்னணியாக கொண்டே எழுதியிருந்தார் பாடலாசிரியர் விவேக். இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ள நிலையில், விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

'சர்கார்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்து கொள்வார் என்று செய்திகள் வெளியாகின. இதற்கு ரஜினி தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ‘ பேட்ட’ படத்திற்காக வராணாசியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் ரஜினி. ஆனால், ‘சர்கார்’ படக்குழுவினருக்கு ரஜினி வீடியோ வடிவில் வாழ்த்து கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x