Published : 05 Oct 2018 09:39 AM
Last Updated : 05 Oct 2018 09:39 AM

விஜய் டிவியில் ‘அதே கண்கள்’

விஜய் தொலைக்காட்சியில் சிறிய இடைவெளிக்குப் பிறகு, ‘அதே கண்கள்’ என்ற புதிய அமானுஷ்ய தொடர் வரும் 8-ம் தேதி தொடங்குகிறது. இது, ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் அந்தரா பிஸ்வாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் ‘நஸர்’ என்ற பெயரில் ஒளிபரப்பான இந்தி தொடரின் மொழிமாற்றம்.

200 ஆண்டுகளுக்கு மேல் வாழும் தீய சக்தியான மோகினி, தன்னை இளமையாக வைத்துக்கொள்ள மனிதர்களைக் கொல்லும் அரக்க குணத்தை வெளிப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் மிருதுள் என்பவரைக் கவர்ந்து திருமணம் செய்துகொள்கிறார். தான் இளமை அடைவதற்காக, சதித் திட்டம் தீட்டி, மிருதுளை கொலை செய்கிறாள். இந்த திருமணம் மூலம் அவர்களுக்கு அன்ஸ், காஜல் என 2 குழந்தைகள் பிறக்கின்றன. இதற்கிடையில், மோகினி செய்த சதியை திவ்யா என்பவர் கண்டுபிடிக்கிறார். மிகவும் போராடி, மோகினியிடம் இருந்து இரு குழந்தைகளையும் மீட்கிறார். 18 ஆண்டுகள் கழித்து, அந்த பிள்ளைகளில் ஒருவரான அன்ஸுக்கு அசாதாரண சக்தி கிடைக்கிறது. இந்த சூழலில், மோகினி வருவாரா? அதன்பிறகு என்ன நடக்கிறது என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘அதே கண்கள்’ தொடர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x