Published : 01 Oct 2018 06:54 PM
Last Updated : 01 Oct 2018 06:54 PM

விஜய் என்ன பேசினார்?- பரியேறும் பெருமாள் கதிர் பேட்டி

'பரியேறும் பெருமாள்' குறித்து விஜய் பேசியது என்ன? என்பது பற்றி கதிர் கூறியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்து வெளியான படம் 'பரியேறும் பெருமாள்'. பா.இரஞ்சித் தயாரித்துள்ள இப்படத்துக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

சமூக வலைதளத்தில் பலரும் ‘பரியேறும் பெருமாள்’ குறித்தே ட்வீட் செய்து வருகிறார்கள். இதனை விஜய்யும் கதிரிடம் பேசும்போது குறிப்பிட்டு இருக்கிறார். இது தொடர்பாக கதிரைத் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறியதாவது:

''விஜய் அண்ணா பேசியது ஆச்சர்யமாக இருந்தது. ஜெகதீஷ் அண்ணாவுக்கு போன் பண்ணி “என்னடா நம்ம தம்பி படத்தைப் பற்றி ஊரெல்லாம் பேச்சா இருக்கு.. சூப்பர்டா. வாழ்த்துகள் சொன்னேன்னு சொல்லிடு” என்று கூறியிருக்கார். அப்போது நானும் ஜெகதீஷ் அண்ணாவுடன் தான் இருந்தேன். உடனே “இங்க தான் அண்ணா இருக்கான். நீங்களே சொல்லிவிடுங்கள்” என்று போனை என்னிடம் கொடுத்துவிட்டார்.

ரொம்ப சந்தோஷம்டா கதிர். உன் படத்தைப் பற்றித்தான் எல்லோரும் பேசிட்டு இருக்காங்க. சூப்பரா இருக்குன்னு சொல்றாங்க. கேட்கும் போது ரொம்ப சந்தோஷப்பட்டேன். ரொம்ப பெரிய வெற்றி இது. மக்களே ஒரு படத்தை இவ்வளவு பெரியளவுக்கு பேசுறாங்க என்றால் மிகப்பெரிய வெற்றி. இந்த சந்தோஷத்தை என்ஜாய் பண்ணு. இன்னும் நான் படம் பாக்கல. சீக்கரமே பாத்துட்டு கூப்பிடுறேன் என்று என்னிடம் பேசும் போது விஜய் அண்ணா கூறினார். தளபதி சொன்னவுடனே ஒட்டுமொத்த அவரது ரசிகர்களும் சொன்ன மாதிரி இருந்தது'' என்றார் கதிர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x