Published : 12 Oct 2018 09:27 AM
Last Updated : 12 Oct 2018 09:27 AM
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலில் கீர்த்தியாக வரும் நிஷ்மா செங்கப்பா, தெலுங்கு ஈ டிவி சேனலில் ஒளிபரப்பாகும் ‘சாவித்ரி’ தொடரில் சாவித்ரி கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.
‘‘நான் பெங்களூரு பொண்ணு. தமிழ்ல ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலுக்காக சென்னை, பெங்களூருன்னு மாறி மாறி வட்டமடிக்கிறதே போதும்னு, முதல்ல ‘சாவித்ரி’ சீரியலை ஒப்புக்கொள்ளாமல்தான் இருந்தேன். இப்போ அந்த சீரியலுக்கு அங்கே கிடைக்கிற வரவேற்பு.. அப்பப்பா.. என்னாலயே நம்ப முடியலை. அந்த அளவுக்கு ரீச். அந்த சந்தோஷத்தில், இப்போ சென்னை, பெங்களூரு, ஹைதராபாத்னு சுத்தினாலும் சோர்வே ஆகுறதில்லை. ஜீ தமிழ்ல ‘நிறம் மாறாத பூக்கள்’ கிட்டத்தட்ட 250 எபிஸோட்ஸ் வந்துட்டோம். ஒரு வருஷத்துக்கு மேல ஓடியாச்சு. செம ரெஸ்பான்ஸ். ரசிகர்கள் சீரியல்களை பார்த்துட்டு போன், ஃபேஸ்புக்ல பாராட்டுறது அந்த காலம். இப்பெல்லாம் நேரடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்துடுறாங்க. அந்த அளவுக்கு சீரியல்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு’’ என்ற நிஷ்மாவிடம், ‘‘இப்போ காதல்லயும் விழுந்துட்டதா கேள்விப்பட்டோமே?’ என்றதும், வெட்கப் புன்னகையோடு, ‘‘ஆமா. உண்மைதான். அவர் மீடியா நபர் இல்லை. பெங்களூருவாசி. அவர் யார் என்பதை விரைவில் சொல்றேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT