Published : 19 Aug 2018 11:19 AM
Last Updated : 19 Aug 2018 11:19 AM

சீரியல்கள் குறித்து நவீன் ஆதங்கம்

இயக்குநர் நவீன், ‘மூடர் கூடம்’ திரைப்படத்தை அடுத்து, ‘அலா வுதீனின் அற்புத கேமரா’ படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கவும் செய்திருக்கிறார். இதில் ஆனந்தி முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

ட்விட்டரில் தொடர்ந்து கருத்துகளை பகிர்ந்துவரும் நவீன், தொலைக்காட்சி சீரியல்களின் போக்கு குறித்து ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.

‘‘அன்று கலைவாணர், பேரறிஞர், கலைஞர், நடிகவேள் போன்றோர் பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக நாடக மேடைகள், சினிமாவை கையாண்டனர் இன்றைய டிவி சீரியல்கள் நம் சமூகத்தை மீண்டும் 2 ஆயிரம் வருடங்கள் பின்னுக்கு தள்ளிவிடும் போலிருக்கிறது’’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x