Published : 13 Aug 2018 03:14 PM
Last Updated : 13 Aug 2018 03:14 PM

கேரளாவில் வெள்ளப் பாதிப்பு: நடிகை ஸ்ரீபிரியா ரூ.10 லட்சம் நிதியுதவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு, நடிகை ஸ்ரீபிரியா 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கேரளாவில் கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்குப் பெருமழை பெய்துள்ளது. 10 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன. 8,316 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது.1924-ம் ஆண்டுக்குப் பிறகு கேரளாவில் மழை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 39 பேர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாயும், வீடிழந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

மலையாள முன்னணி நடிகர்களுள் ஒருவரான மம்மூட்டி 15 லட்ச ரூபாயும், அவருடைய மகனும் நடிகருமான துல்கர் சல்மான் 10 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கியுள்ளனர். இதேபோல நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து, முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர். மேலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் 5 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் அவருடைய கணவர் ராஜ்குமார் சேதுபதி இருவரும் 10 லட்ச ரூபாய் நிதியை கேரளாவுக்கு வழங்கியுள்ளனர். முதல்வர் நிவாரண நிதிக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x