Published : 06 Aug 2018 02:57 PM
Last Updated : 06 Aug 2018 02:57 PM
‘சிசிடிவி மற்றும் போலீஸ் இரண்டுமே வேலைசெய்ய வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது' என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வீட்டிலும் சிசிடிவி கேமரா வைப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் படமொன்றில் நடித்துள்ளார் விவேக். இந்தப் படம் ட்விட்டரில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில், ‘சிசிடிவி கேமரா என்பது போலீஸின் மூன்றாவது கண்’ எனக் குறிப்பிட்டுள்ளார் விவேக்.
.@Actor_Vivek’s informative campaign video on the importance of #CCTV for @chennaipolice_ @PRO_Priya pic.twitter.com/klFRi2eDJt
— Sreedhar Pillai (@sri50) August 4, 2018
அந்தப் படத்துக்குக் கீழே, “என்னுடைய சகோதரரின் ராயல் என்பீல்டு பைக், அவருடைய அபார்ட்மென்ட் பார்க்கிங்கில் இருந்து திருடு போனது. சிசிடிவியில் பதிவான திருட்டுக் காட்சிகளை என்னுடைய சகோதரர் போலீஸில் ஒப்படைத்தார்.
ஆனால், பைக்கைத் தேடுவதற்கான எந்தவிதமான முயற்சியையும் போலீஸ் இன்னும் எடுக்கவில்லை. சிசிடிவி மற்றும் போலீஸ் இரண்டுமே வேலைசெய்ய வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார் பிரசன்னா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT