Last Updated : 13 Aug, 2014 09:30 AM

 

Published : 13 Aug 2014 09:30 AM
Last Updated : 13 Aug 2014 09:30 AM

நித்யானந்தா வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

நித்யானந்தா வழக்கில் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய் யும்படி கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்தா மீது கடந்த 2010-ஆம் ஆண்டு தொடரப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தும்படி கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசு பதிலளிக்கவும் அவகாசம் அளித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், என்.வி.ரமணா அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. கர்நாடக அரசு தரப்பில் கால அவகாசம் கோரினர். இதனால் கோபமடைந்த நீதிபதி கள், ‘ஒரு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் போதாதா? நித்யானந்தா தொடர்பாக இன் னொரு வழக்கு இதே நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதை நீங்கள் இரு தரப்புமே எங்களுக்கு தெரிவிக்க வில்லை. வழக்கு இங்கு நிலுவை யில் இருப்பதை மறைத்து உத்தரவு பெறுவது தவறு. ‘4 ஆண்டுகளாக ஒரு குற்ற வழக்கில் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. உங்கள் நடவடிக்கையில் எங் களுக்கு கொஞ்சம்கூட திருப்தி யில்லை’ என்றும் நீதிபதிகள் குறிப் பிட்டனர்.

அதற்கு கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x