Last Updated : 07 Aug, 2018 07:37 PM

 

Published : 07 Aug 2018 07:37 PM
Last Updated : 07 Aug 2018 07:37 PM

தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு: கருணாநிதிக்கு சரத்குமார் புகழாஞ்சலி

தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கருணாநிதி மறைவுக்கு சரத்குமார் புகழாஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.

கருணாநிதியின் மறைவு குறித்து சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “75 ஆண்டுகளாக மக்களுக்காக அயராது உழைத்த மாபெரும் தலைவர் இவருக்கு முன்பாகவும் இவருக்குப் பிறகும் அவரது ஆளுமைக்கு நிகரான தலைவரைப் பார்க்க முடியாது. மாநிலத்துக்கும், உலகம் முழுதும் உள்ள தமிழர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். திமுக தொண்டர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x