நவம்பரில் தொடங்கும் சுந்தர்.சி – விஷால் படம்

நவம்பரில் தொடங்கும் சுந்தர்.சி – விஷால் படம்
Updated on
1 min read

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கவுள்ளது.

நயன்தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்னும் சில தினங்களே இருக்கிறது. இதனை முடித்துவிட்டு விஷால் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார். ‘மதகஜராஜா’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது.

விஷால் படத்தின் நாயகிகளாக தமன்னா மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதற்கான ப்ரோமோ வீடியோ ஒன்றையும் படமாக்கி இருக்கிறார்கள். இந்த வீடியோ பதிவு வெளியீட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு, இந்த ப்ரோமோவை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறார்கள்.

விஷால் படத்தினை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தினை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். விஷால் படத்தினை முடித்துவிட்டு ரஜினி படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார் சுந்தர்.சி. இதற்கான கதை விவாதம் உள்ளிட்ட பணிகளும் ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in