Published : 14 Aug 2018 06:33 PM
Last Updated : 14 Aug 2018 06:33 PM
சூர்யாவின் 37-வது படத்தில், பாலிவுட் நடிகர் சிரக் ஜானி இணைந்துள்ளார்.
சூர்யாவின் 37-வது படத்தை, கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ‘சூர்யா 37’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. லண்டனில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு டெல்லி, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் நடைபெற இருக்கிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட் செய்கிறார். மோகன்லால், ஆர்யா, சயீஷா, சமுத்திரக்கனி, பொமன் இரானி ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷ், இந்தப் படத்தில் நடிக்க கமிட்டானார். ஆனால், கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலக, அவருக்குப் பதிலாக பாலிவுட் நடிகர் சிராக் ஜானி ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தகவலை ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார் கே.வி.ஆனந்த்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT