Published : 28 Aug 2018 03:00 PM
Last Updated : 28 Aug 2018 03:00 PM
இரண்டரை ஆண்டு வலி முடிவுக்கு வந்தது என இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.
அருள்நிதி நடித்த ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. ரமேஷ் திலக், சனந்த் ரெட்டி, அபிஷேக் ஜார்ஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ஹாரர் த்ரில்லர் படமான இது, விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
2015-ம் ஆண்டு மே மாதம் ‘டிமான்ட்டி காலனி’ ரிலீஸானது. அதன்பிறகு ‘இமைக்கா நொடிகள்’ என்ற படத்தை ஆரம்பித்தார் அஜய் ஞானமுத்து. நயன்தாரா பிரதான வேடத்தில் நடிக்க, அவருடைய தம்பியாக அதர்வா நடித்துள்ளார். நயன்தாரா ஜோடியாக கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க, பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் கஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். சில பல தடைகளைத் தாண்டி வருகிற வியாழக்கிழமை (ஆகஸ்ட் 30) இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. ‘இரண்டரை ஆண்டு வலி முடிவுக்கு வந்தது’ என முகநூலில் பதிவிட்டுள்ளார் அஜய் ஞானமுத்து.
“இமைக்கா நொடிகள் ரிலீஸாகப் போகிறது. இரண்டரை ஆண்டு வலி, கடின உழைப்பு, அவமானங்கள், ஏமாற்றங்கள், வேடிக்கை, இக்கட்டான தருணங்கள் எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டன. எனது நம்பிக்கையை இழக்கவிடாமல், எனக்குப் பக்கபலமாக இருந்த எனது குழுவுக்கு மிகப்பெரிய நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார் அஜய் ஞானமுத்து.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT