Published : 31 Jul 2018 05:13 PM
Last Updated : 31 Jul 2018 05:13 PM

“நமது சோற்றில் உப்பைச் சேர்த்தவர் இயக்குநர் ஷங்கர்” - இயக்குநர் விக்னேஷ் சிவன்

‘நமது சோற்றில் உப்பைச் சேர்த்தவர் இயக்குநர் ஷங்கர்’ எனப் பாராட்டியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

அர்ஜுன் நடித்த ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். 1993-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகி நேற்றுடன் 25 வருடங்கள் ஆகிவிட்டன. எனவே, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் பாராட்டியும் வருகின்றனர்.

“தமிழ் சினிமா பார்க்கும் அனுபவத்தையே பெரிதாக்கிய மனிதர் இயக்குநர் ஷங்கர். 100 ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் நமக்கு உலகத்தைச் சுற்றிக் காட்டியவர். முக்கிய சமூகப் பிரச்சினைகளைப் பற்றி நம்மை யோசிக்க வைத்தவர். நமது சோற்றில் உப்பைச் சேர்த்தவர். 1993-ல் இருந்து பிரம்மாண்டம் மற்றும் பெரும் திறமைக்கு சொந்தக்காரர்” என ட்விட்டரில் பாராட்டியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படம் தற்போது ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார் ஷங்கர். இந்தப் படத்தையும் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x