Published : 31 Jul 2018 02:19 PM
Last Updated : 31 Jul 2018 02:19 PM

வளைகாப்புடன் தொடங்கும் ‘நான் செய்த குறும்பு’

கயல் சந்திரன் நடிக்க இருக்கும் ‘நான் செய்த குறும்பு’ படத்தின் பூஜை, வளைகாப்பு நிகழ்ச்சியுடன் தொடங்க இருக்கிறது.

கயல் சந்திரன் நடிப்பில் ‘கிரஹணம்’, ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’, ‘பார்ட்டி’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்குத் தயாராக உள்ளன. தற்போது ‘டாவு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சந்திரன்.

இந்நிலையில், அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்துக்கு ‘நான் செய்த குறும்பு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு என்பவர் இந்தப் படத்தை இயக்குவதோடு, தயாரிக்கவும் செய்கிறார். சந்திரனுக்கு ஜோடியாக அஞ்சு குரியன் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 5-ம் தேதி பூஜையுடன் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தின் கதை பெண்களைக் கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், பூஜையன்று ஆதரவற்ற 9 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த இருக்கிறது படக்குழு. இதற்கும், படத்தின் கதைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதாம்.

ஆடி கார் ஷோரூமில் விற்பனைப் பிரிவில் பணியாற்றுபவராக சந்திரனும், ஐடி கம்பெனி நடத்தும் கோடீஸ்வர தொழிலதிபராக அஞ்சு குரியனும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x