Published : 26 Aug 2014 12:08 PM
Last Updated : 26 Aug 2014 12:08 PM
பாலியல் தொந்தரவால் ராஜினாமா செய்த பெண் நீதிபதி தன்னை மீண்டும் பணியமர்த்துமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
குவாலியர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றிய பெண் நீதிபதி, மத்தியப்பிரதேசம் உயர் நீதிமன்ற நீதிபதி தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், அவர் தன்னை மீண்டும் கூடுதல், செசன்ஸ் நீதிபதியாக பணியமர்த்துமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
மேலும், தனது குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள அவர் அந்த விசாரணைக் குழுவுக்கு மாறாக, இரண்டு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள், ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு குழுவையும் அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விசாரணைக் குழு மாற்றி அமைக்கப்பட்டால் மட்டுமே நேர்மையான விசாரணை நடைபெறும் என்றும் அவ்வாறு குழு மாற்றப்படாவிட்டால் தான் விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT