Published : 24 Apr 2025 01:04 PM
Last Updated : 24 Apr 2025 01:04 PM
‘ஸ்டார்’ இயக்குநர் இளன் தனது அடுத்த படத்தினை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார்.
‘ஸ்டார்’ படத்தினை தொடர்ந்து தனுஷ் படத்தினை இயக்கவுள்ளார் இளன் என்று செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது தனுஷ் பல்வேறு படங்களை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவருடைய தேதிகள் இருக்காது என்பது உறுதியாகிவிட்டது. இதனை முன்னிட்டு புதிய முடிவொன்றை எடுத்துள்ளார் இளன்.
தனது அடுத்த படத்தில், தானே நாயகனாக நடிக்க முடிவு எடுத்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை முடிவுற்று, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது. இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முழுக்க காதலை மையமாக வைத்து இக்கதையினை உருவாக்கி இருக்கிறார் இளன்.
முன்னதாக, ‘லவ் டுடே’ படத்தின் மூலம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நடிகராக அறிமுகப்படுத்தியது ஏஜிஎஸ் நிறுவனம். தற்போது அவர் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். அந்த பாணியில் இளனையும் நாயகனாக்க முடிவு செய்திருக்கிறது ஏஜிஸ் நிறுவனம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT