Published : 18 Jul 2018 05:36 PM
Last Updated : 18 Jul 2018 05:36 PM

பிரபுதேவா அசிஸ்டன்ட் கமிஷனராக நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’

காவல்துறை உதவி ஆணையராக பிரபுதேவா நடிக்கும் படத்துக்கு ‘பொன் மாணிக்கவேல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‘யங் மங் சங்’, ‘லக்‌ஷ்மி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘காமோஷி’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கும் பிரபுதேவா, சல்மான் கான் நடிப்பில் ‘தபாங் 2’ படத்தை இயக்குவதற்கான ஆயத்த வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ஏ.சி.முகில் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வந்தார்.

அந்தப் படத்துக்கு ‘பொன் மாணிக்கவேல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில், காவல்துறை உதவி ஆணையராக நடிக்கிறார் பிரபுதேவா. தமிழகத்தின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி.யான பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாவதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இருவரும் கணவன் - மனைவியாக நடிக்கின்றனர். இயக்குநர் மகேந்திரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், ‘பாகுபலி’யில் காளகேய ராஜாவாக நடித்த பிரபாகரும் நடிக்கிறார்.

போலீஸ் கதை என்பதால், ஆக்‌ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ‘பொன் மாணிக்கவேல்’ உருவாகி வருகிறது. மொத்தம் 5 சண்டைக் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெறுகின்றன. ஒவ்வொன்றும் தனித்துவமாகத் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x