

பிப்ரவரி 6-ம் தேதி ‘விடாமுயற்சி’ வெளியாக இருப்பதால், ‘டிராகன்’ வெளியீட்டு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து பிரச்சினைகளையும் கடந்து பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகவுள்ளது ‘விடாமுயற்சி’. பொங்கல் வெளியீடு என்று திட்டமிடப்பட்டு மாற்றப்பட்ட போது, பல்வேறு படங்கள் வெளியாகின. இதனால் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் பல்வேறு குழப்பங்கள் எழுந்தது. தற்போது பிப்ரவரி 6-ம் தேதி வெளியீடு என்று அறிவித்தவுடன், பிப்ரவரி வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்ட படங்கள் யாவும் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
முதலில் பிப்ரவரி 7-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் தற்போது பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட ‘டிராகன்’ திரைப்படமும் ஒரு வாரம் தள்ளி பிப்ரவரி 21-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளனர். இதன் மூலம் ஒரே தேதியில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.
இந்த மாற்றத்துக்குக் காரணம் ‘விடாமுயற்சி’ படம் தான் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ‘டிராகன்’ படத்தில் நாயகனாக நடித்துள்ள பிரதீப் ரங்கநாதன், “தல வந்தா தள்ளிப் போய் தானே ஆகணும். பிப்ரவரி 21-ம் தேதி முதல் டிராகன்” என்று தெரிவித்துள்ளார்.