Published : 17 Jul 2018 02:45 PM
Last Updated : 17 Jul 2018 02:45 PM
‘பேரன்பு’ இசை வெளியீட்டு விழாவில் மிஷ்கின் கூறிய கருத்தால் அருவருப்படைகிறேன் என்று பிரசன்னா தெரிவித்திருக்கிறார்.
ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேரன்பு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா, வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் மம்மூட்டியைப் பாராட்டிப் பேசும் போது இயக்குநர் மிஷ்கின் “நான் பெண்ணாக இருந்திருந்தால், மம்மூட்டியைப் பலாத்காரம் செய்திருப்பேன்” என்று குறிப்பிட்டார். இப்பேச்சு தற்போது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
மிஷ்கினின் கருத்துக்கு நடிகர் பிரசன்னா தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பிரசன்னா, “மிஷ்கின் எனது நண்பர்தான். ஆனாலும் தமிழ் நடிகர்கள் பற்றியும், பெண்கள் பற்றியும் அவர் கூறிய வார்த்தைகள் குறித்து நான் அருவருப்படைகிறேன், வெட்கப்படுகிறேன். அதைக் கேட்டு சிரித்த மக்களைப் பார்த்து பாவப்படத்தான் முடியும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
பிரசன்னாவின் கருத்துக்கு ரசிகர் ஒருவர், “நீங்கள் கூறுவது சரி தான். ஒரு வார்த்தை தன் மீது தவறான பார்வையை உருவாக்கும் என தெரிந்திருக்க வேண்டும். இதனை மீடியா பெரிய பிரச்சினையாக உருவாக்கும்” என்று தெரிவித்தார்.
இதற்கு “இதை வைத்து ஒரு பிரச்சினையை உருவாக்கவேண்டும் என்பதல்ல. ஆனால் பொது மேடையில் பேசும் போது, என்ன பேசுகிறோம் என்பதில் ஒரு அடிப்படை கண்ணியத்தை, ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார் பிரசன்னா.
மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘அஞ்சாதே’, ‘துப்பறிவாளன்’ உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரசன்னா என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT