Published : 27 Jun 2018 11:40 AM
Last Updated : 27 Jun 2018 11:40 AM

சிவகார்த்திகேயன் படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது!

சிவகார்த்திகேயன் நடிக்கும் 14-வது படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது.

‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவிக்குமார். சயின்ஸ் பிக்‌ஷன் படமான இது, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் ரிலீஸாகி நேற்றுடன் 3 வருடங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில், அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் ரவிக்குமார்.

சிவகார்த்திகேயனுக்கு, இது 14-வது படமாகும். வழக்கம்போல 24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகிபாபு, பானுப்ரியா, ‘கலக்கப்போவது யாரு’ கோதண்டம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்க, பல்லவி சிங் ஆடைகளை வடிவமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘சீம ராஜா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 19-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கிடையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x