கையில் துப்பாக்கியுடன் பிருத்விராஜ் - ‘எம்புரான்’ கதாபாத்திர போஸ்டர் எப்படி?

கையில் துப்பாக்கியுடன் பிருத்விராஜ் - ‘எம்புரான்’ கதாபாத்திர போஸ்டர் எப்படி?
Updated on
1 min read

சென்னை: நடிகர் பிருத்விராஜின் பிறந்த நாளையொட்டி ‘எம்புரான்’ படத்தின் அவரது கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் துப்பாக்கியுடன் நிற்கும் பிருத்விராஜின் மாஸான தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக்கானது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த இப்படத்தை மோகன்ராஜா இயக்கினார். ‘லூசிஃபர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என பிருத்விராஜ் அறிவித்திருந்தார். அதன்படி இரண்டாம் பாகத்துக்கு ‘எம்புரான்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு சினிமாவாக அதிக பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் பான் இந்தியா முறையில் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்நிலையில் பிருத்விராஜின் பிறந்த நாளையொட்டி அவரது கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

போஸ்டர் எப்படி?: படத்தில் பிருத்விராஜ் ராணுவ ஜெனரலாக நடித்திருப்பதை போஸ்டர் உறுதி செய்கிறது. அதன்படி அவர் கறுப்பு ராணுவ உடையில், கையில் துப்பாக்கியும், கண்களில் கூலிங் க்ளாஸும் அணிந்து கொண்டு நிற்கிறார். ‘சயீத் மசூத்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிருத்விராஜின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in