Published : 21 Jun 2018 10:46 AM
Last Updated : 21 Jun 2018 10:46 AM

தமிழுக்கு வரும் இந்தி நாயகி

‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் ராஜு அடுத்து சந்திப் கிஷன் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தை இயக்கி வருகிறார்.

திகில் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வளரும் இப்படத்தில் பாலிவுட் நடிகை ஆன்யா சிங் நாயகியாக நடிக்கிறார். சந்திப் கிஷனுடன் தமிழ் வெர்ஷனில் கருணாகரன், ஆனந்தராஜ் முக்கிய வேடம் ஏற்கிறார்கள். முதல் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவு பெற்றுள்ளது.

அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னை யில் ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்படத்துக்கு தமன் இசைமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x