Published : 25 Jun 2018 08:31 PM
Last Updated : 25 Jun 2018 08:31 PM
சுந்தர்.சி இயக்க இருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தின் ஷூட்டிங், ஆகஸ்ட்டில் தொடங்கலாம் என்கிறார்கள்.
‘பாகுபலி’யைப் போன்ற மிகப்பெரிய வரலாற்றுப் படமாக ‘சங்கமித்ரா’வை அறிவித்தார் சுந்தர்.சி. கடந்த வருடம் கேன்ஸ் திரைப்பட விழாவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் 250 கோடி ரூபாயில் இந்தப் படத்தைத் தயாரிப்பதாக கூறப்பட்டது.
ஆனால், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக ‘சங்கமித்ரா’ படம் தொடங்குவது தள்ளிக்கொண்டே போனது. இந்தப் படத்துக்காக சிறப்புப் பயிற்சியாளரை வைத்து வாள் சண்டை கற்றுக்கொண்ட ஸ்ருதி ஹாசன், திடீரென படத்தில் இருந்து விலகினார். ‘படத்தின் கதையை முழுமையாகக் கூறவில்லை’ என அவர் காரணம் சொன்னார்.
எனவே, ஸ்ருதி ஹாசனுக்குப் பதிலாக திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனாலும் படம் தொடங்குவது தாமதமாகவே, திடீரென ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்து, படப்பிடிப்பைத் தொடங்கினார் சுந்தர்.சி. ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ரானி, கேத்ரின் தெரேசா ஆகியோர் நடித்த இந்தப் படம், கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸானது.
அதன்பிறகும் ‘சங்கமித்ரா’ தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதத்தில் படம் தொடங்கப்படலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT