Published : 26 Jun 2018 09:35 AM
Last Updated : 26 Jun 2018 09:35 AM
ராஜு முருகன் இயக்கத்தில், ஜீவா, நடாஷா சிங் நடிப்பில் உருவாகிவரும் ‘ஜிப்சி’ திரைப்படம் காரைக்கால் பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் வட மாநிலப் பின்னணியில் பயணம் சார்ந்த கதைக்களமாக உருவாகி வரும் இப்படத்தின் பெரும்பகுதியை காரைக்காலில் படமாக்கி வருகிறார் இயக்குநர் ராஜு முருகன். பாடல்கள், முக்கிய காட்சிகள் அனைத்தும் இங்குதான் எடுக்கப்பட உள்ளன.
படம் குறித்து அவர் கூறும்போது, ‘‘காரைக்கால் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் இந்தக் கதைக்களத்துக்கு மிகவும் பொருத்தமாக உள்ளன. இன்னும் 20 நாட்கள் இங்கு வேலை இருக்கிறது. அது முடியும்போது படத்தின் பெரும்பாலான பகுதிகள் நிறைவு பெறும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT