Published : 12 Jun 2018 10:05 AM
Last Updated : 12 Jun 2018 10:05 AM

ராஜ் டிவியில் 5 புதிய தொடர்கள்

ராஜ் தொலைக்காட்சியில் ‘கண்ணம்மா’, ‘ஹலோ சியாமளா’, ‘நலம் நலமறிய ஆவல்’, ‘கடல் கடந்து உத்தியோகம்’, ‘கங்காதரனை காணோம்’ என்கிற 5 புதிய நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளன. திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7 மணியில் இருந்து அரை மணி நேரத்துக்கு ஒரு தொடர் என்ற வரிசையில் இவை ஒளிபரப்பாகின்றன.

ஒரு பெண், பிறந்தது முதல் வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டங்களை அனுபவித்து முன்னுக்கு வரப் போராடுகிறாள் என்பதை பற்றியது ‘கண்ணம்மா’ தொடர். ஒரு தாய்க்கு 4 மகள்கள். மூத்த பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்து, அவள் கர்ப்பமாகும்போது, அதே நேரத்தில் தாயும் கர்ப்பமாகிறாள். இதனால் ஏற்படும் கலாட்டாக்களை காமெடியாக சொல்கிறது ‘ஹலோ சியாமளா’ தொடர்.

இரு நண்பர்கள் பற்றிய கதையாக வருகிறது ‘நலம் நலமறிய ஆவல்’ தொடர். குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் வேலை பார்ப்போரின் வாழ்க்கையையும், வலியையும் பறைசாற்றுகிறது ‘கடல் கடந்து உத்தியோகம்’ தொடர். ஒரு தந்தை தன் பிள்ளைகளால் எப்படி எமோஷனலாக பாதிக்கப்படுகிறார் என்பதை ‘கங்காதரனை காணோம்’ தொடர் வெளிச்சம்போட்டு காட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x