Published : 18 Aug 2014 10:39 AM
Last Updated : 18 Aug 2014 10:39 AM

பிஹாரில் ஓடும் ரயிலில் கொள்ளையர் சுட்டு 2 பேர் பலி

பிஹார் மாநிலத்தில் ஓடும் ரயிலில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பயணிகளில் இருவர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து கிழக்கு மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி அர்விந்த் குமார் ரஜக் கூறியதாவது:

கோரக்பூர்-ஹதியா மவுரியா எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை நள்ளிரவு பிஹார் மாநிலம் ஹதிடா ரயில் நிலையத்துக்கு வந்துள்ளது. அப்போது ஒரு பெட்டிக்குள் ஏறிய ஆயுதம் ஏந்திய 6 பேர், துப்பாக்கியை காட்டி பயணிகளிடம் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.

அப்போது பொருட்களை கொடுக்க மறுத்தவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் 2 பயணிகள் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். பின்னர் அவர்கள் ராம்புர் தும்ரா ரயில் நிலையத்தில் குதித்து தப்பி ஓடிவிட்டதாக பயணிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x