Published : 13 Apr 2018 02:36 PM
Last Updated : 13 Apr 2018 02:36 PM
சிறந்த பாடகருக்கான தேசிய விருது யேசுதாஸுக்கும், சிறந்த பாடகிக்கான விருது ஷாஷா திருப்பதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. குஞ்சு முஹம்மது இயக்கத்தில் வெளியான 'விஸ்வாசபூர்வ மன்சூர்' மலையாளப் படத்தில் இடம்பெற்ற ‘போயி மறஞ்ச காலம்’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது கே.ஜே.யேசுதாஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேம்தாஸ் குருவாயூர் எழுதிய இந்தப் பாடலுக்கு, ரமேஷ் நாராயண் இசையமைத்துள்ளார். இதுவரை 7 முறை தேசிய விருது வென்றுள்ள யேசுதாஸுக்கு, இது 8-வது விருதாகும்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற ‘வான் வருவான்’ பாடலுக்காக ஷாஷா திருப்பதிக்கு, சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வைரமுத்து எழுதிய இந்தப் பாடலுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மும்பையைச் சேர்ந்த ஷாஷா, முதன்முதலாகப் பெறும் அரசு விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT