Published : 10 Apr 2018 12:39 PM
Last Updated : 10 Apr 2018 12:39 PM
பார்த்திபன் இயக்கவுள்ள புதிய படத்தில், ஹீரோவாக பிரபுதேவா நடிக்க இருக்கிறார்.
பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த படம் ‘உள்ளே வெளியே’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் பார்த்திபன். சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் பார்த்திபன். பிரபுதேவாவிடம் கதை சொல்லி, ஓகே கூட வாங்கிவிட்டார்.
தற்போது ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்துவரும் பிரபுதேவா, அடுத்து சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ‘தபாங்’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளதால், உடனடியாகப் படம் தொடங்குமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT