Published : 05 Apr 2018 03:31 PM
Last Updated : 05 Apr 2018 03:31 PM

“காவிரி பிரச்சினை, சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்சினை” - நடிகர் சசிகுமார் வேதனை

‘காவிரி மேலாண்மை வாரியம் என்பது சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்சினை’ என நடிகரும் இயக்குநருமான சசிகுமார் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, சினிமாத்துறையினரும் காவிரி பிரச்சினைக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான சசிகுமாரும் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். “இது விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சினை இல்லை. சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்சினை. காவிரி மேலாண்மை வாரியம் அமைவதுதான் எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு. உப்பிட்டவர்களை உள்ளளவும் நினை என்பார்கள். அப்படியென்றால் சோறிட்டவர்களை..?” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சசிகுமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x