Published : 05 Apr 2018 12:19 PM
Last Updated : 05 Apr 2018 12:19 PM

லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் அனிருத்

ஜூன் மாதம் 16 மற்றும் 17ஆம் தேதிகளில், லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் அனிருத். ஜூன் 16 ஆம் தேதி லண்டனில் உள்ள எஸ்எஸ்இ வெம்ப்ளி அரேனா என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.

17ஆம் தேதி பாரீஸில் உள்ள ஜெனித் என்ற இடத்தில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் அனிருத். இதுவரை இந்த இடத்தில் ஒரு தமிழ்க் கலைஞர் கூட இசை நிகழ்ச்சி நடத்தியது கிடையாது. அனிருத் தான் முதன்முதலாக இங்கு இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறார். இதற்கான டிக்கெட் விற்பனை அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது.

இந்த இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹம்சினி எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் என்ற இரண்டு நிறுவனங்கள் இணைந்து கவனித்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x