Last Updated : 19 Feb, 2018 03:43 PM

 

Published : 19 Feb 2018 03:43 PM
Last Updated : 19 Feb 2018 03:43 PM

"அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை நான் இயக்கவில்லை": கிறிஸ்டோபர் நோலன்

"அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை நான் இயக்கவில்லை" என்று இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் படத்தின் அடுத்த பாகத்தை இயக்க வேறொரு இயக்குநருக்கான தேடுதல் படலம் தொடங்கியுள்ளது. இதன் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனாக இருக்கலாம் என்ற வதந்திகளும் உலவின. ஆனால் தான் அந்தப் படத்தை இப்போதைக்கு இயக்கவில்லை என நோலன் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிபிசி ரேடியோ 4ல் பேசியுள்ள நோலன், "ஒவ்வொரு முறை அவர்கள் புதிய இயக்குநரை தேடுகிறார்கள் எனும்போது எனது பெயரும் புரளியாக அடிபடுகிறது. எனக்கு பாண்ட் படம் இயக்குவதில் விருப்பமுண்டு. தயாரிப்பாளர்கள் பார்பரா மற்றும் மைக்கேல் அற்புதமாக வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

முந்தைய 2 படங்களின் இயக்குநர் சாம் மெண்டிஸ் சிறப்பான படைப்பைத் தந்துள்ளார். அதனால் இப்போதைக்கு அவர்களுக்கு நான் தேவையில்லை. ஆனால் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எப்போதும் என்னை உத்வேகப்படுத்தியுள்ளன. எதிர்காலத்தில் ஒரு படம் இயக்க எனக்கு விருப்பம்தான்" என்று நோலன் பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x