போதைக்கு எதிராக உருவாகும் ‘பெட்டர் டுமாரோ’

போதைக்கு எதிராக உருவாகும் ‘பெட்டர் டுமாரோ’
Updated on
1 min read

சென்னை: ‘டூ ஓவர்' படம் மூலம் விருதுகள் பெற்ற இயக்குநர் ஷார்வி, அடுத்து இயக்கும் படம், ‘பெட்டர் டுமாரோ'. பிரேமா பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், சைலேந்திர சுக்லா தயாரிக்கிறார். சரவணன் இணை தயாரிப்பு செய்கிறார். மானவ், கவுரி கோபன், பாய்ஸ் ராஜன், ஜெகதீஸ் தர்மராஜ், சைலேந்திர சுக்லா, சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பி.ஜீ.வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்கிறார். குமாரசாமி, இசை அமைக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் ஷார்வி கூறும்போது, "அதிர்ச்சியூட்டும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் இது. கொடூரமான எம்.டி.எம்.ஏ போதைப் பொருளுக்கு அடிமையாக இருக்கும் நாயகியின் வாழ்க்கையையும், அவள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப, போராடும் அவரது சகோதரர் அரவிந்தின் வாழ்க்கையையும் இப்படம் விவரிக்கிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in