Published : 21 Jan 2018 03:41 PM
Last Updated : 21 Jan 2018 03:41 PM

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், நாயகியாக கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

இந்நிலையில், ஜனவரி 19-ம் தேதி அன்று சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. தற்போது ஈசிஆரில் 100க்கும் மேற்பட்ட படகுகளைக் கொண்டு முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து மும்பையில் விரைவில் சுமார் 40 நாட்கள் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். 'அங்காடித் தெரு', 'நீர்ப்பறவை', 'கடல்', 'ஏமாலி', '2.0' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்திற்கும் ஜெயமோகன் வசனம் எழுதி இருப்பதாலும், ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x