Published : 07 Jan 2018 10:19 AM
Last Updated : 07 Jan 2018 10:19 AM

நடிகர் சங்க கட்டிடம் நிஜமாகப் போவதில் மகிழ்ச்சி: மலேசிய கலை விழாவில் கமல்ஹாசன் உற்சாகம்

நடிகர் சங்கத்துக்கு தனியே ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு வெகு விரைவில் நிஜமாகப் போவதில் மகிழ்ச்சி என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் நேற்று தமிழ்த் திரைப்பட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மலேசியாவில் உள்ள புக்கிஜாலி ஸ்டேடியத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களின் நடனம், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்ட கிரிக்கெட் போட்டி, கால்பந்து போட்டி உள்ளிட்டவை நடந்தன.

கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் ஸ்டேடியத்துக்குள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேச முடிவை அறிவித்த பிறகு கமல்ஹாசனு டன் இணைந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசும்போது, ‘‘நடிகர் சங்கத்துக்காகவும், அதன் ஆக்கப் பணிகளுக்காகவும் இளம் நடிகர்கள் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள். நடிகர் சங்கத்துக்கு தனியாக ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அந்த கனவு வெகு விரைவில் நிஜமாகப் போவதில் மகிழ்ச்சி’’ என்றார்.

ரஜினிகாந்த் பேச்சு

ரஜினிகாந்த் பேசும்போது, “மலேசியா எனக்கு இரண்டாவது தாய்வீடு. ‘கபாலி’ படப்பிடிப்புக் காக இங்கு வந்தேன். மலேசிய மக்களை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x