Published : 22 Jan 2018 07:41 AM
Last Updated : 22 Jan 2018 07:41 AM

படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்த இயக்குநர் மகேந்திரன்

புதுக்கோட்டையில் நேற்று படப்பிடிப்பின்போது மயங்கிய விழுந்த இயக்குநர் மகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் படுகிறது.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் பகுதியில் ‘புகழேந்தி எனும் நான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற படப்பிடிப்பின்போது இயக்குநர் மகேந்திரன் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த படக்குழுவினர், அவரை புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மகேந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள், உணவு ஒவ்வாமையால் மயங்கி விழுந்துள்ளதாகவும், நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இவர், முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், ஜானி, நண்டு, மெட்டி, நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x