Last Updated : 16 Jan, 2018 11:32 AM

 

Published : 16 Jan 2018 11:32 AM
Last Updated : 16 Jan 2018 11:32 AM

நாடோடிகள் 2 நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்

சமுத்திரக்கனி - சசிகுமார் இணையும் 'நாடோடிகள் 2' படத்தின் நாயகிகளாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி - சசிகுமார் இணைப்பில் வெளியான படம் 'நாடோடிகள்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் 2-ம் பாகத்தில் மீண்டும் சமுத்திரக்கனியும் சசிகுமாரும் இணைந்து பணிபுரியவுள்ளார்கள்.

நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்கள். இசையமைப்பாளராக ஐஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், கலை இயக்குநராக ஜாக்கி மற்றும் ஏ.எல்.ரமேஷ் எடிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

தற்போது இப்படத்தின் நாயகியாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழர் திருநாளன்று 'நாடோடிகள் 2' படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x