Last Updated : 02 Dec, 2017 04:17 PM

 

Published : 02 Dec 2017 04:17 PM
Last Updated : 02 Dec 2017 04:17 PM

விஜய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு ஒப்பந்தம்

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணையும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

'துப்பாக்கி', 'கத்தி' படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளது.

நாயகியாக கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இதன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க யோகிபாபு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இப்படத்தின் தொடக்கத்திலிருந்தே விஜய்யுடன் வருவது போன்றதொரு கதாபாத்திரம் என்பதால், தனக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று மகிழ்ச்சியில் இருக்கிறார் யோகிபாபு.

இதன் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் அல்லது அனிருத் இருவரில் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடக்கம் என்பதால், தற்போது படப்பிடிப்பு இடங்கள் தேர்வு மற்றும் நடிகர் - நடிகைகள் ஒப்பந்தம் உள்ளிட்டவற்றில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.

ஒளிப்பதிவாளராக 'அங்காமலே டைரீஸ்', 'ஸோலோ' ஆகிய படங்களில் பணிபுரிந்த கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மொத்த படக்குழு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை புத்தாண்டு அன்று வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x