Last Updated : 18 Dec, 2017 03:58 PM

 

Published : 18 Dec 2017 03:58 PM
Last Updated : 18 Dec 2017 03:58 PM

அருவி எல்லாவற்றையும் தோலுரித்துள்ளது: இயக்குநர் ஷங்கர்

'அருவி' எல்லாவற்றையும் தோலுரித்துள்ளது என்று இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன், லெனின் பாரதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அருவி'. விமர்சகர்கள் மத்தியில் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இயக்குநருக்கும், நாயகியான அதிதி பாலனுக்கும் திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் 'அருவி' பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஒரு சிறந்த திரைப்படம். எல்லோரையும் எல்லாவற்றையும் தோலுரித்துள்ளது. இயக்குநர் அருண் பிரபு சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். அதிதி பாலன் மற்றும் குழுவினர் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

இவ்வாறு ஷங்கர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x