Published : 20 Dec 2017 05:20 PM
Last Updated : 20 Dec 2017 05:20 PM

சென்னை பட விழா | தாகூர் திரைப்பட மையம் | டிசம்.21 | படக்குறிப்புகள்

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை (டிசம்.21) தாகூர் திரைப்பட மையத்தில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 11.15 மணி | ONE-LINE / ONE-LINE | DIR: YANG KYUNG-MO | KOREAN | 2017 | 132'

சாதாரண பல்கலைக்கழக மாணவரான மின்-ஜாயி. அவன், வங்கித் திருட்டுக்களில் அனுபவமிக்க சுக்-கூவை சந்திக்கிறான். மின்-ஜாயி விரைவில் சுக்-கூ மற்றும் அவனது மோசடிக் குழுவில் இணைந்து திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறான். அவர்களது கொள்ளைகூட்ட வேலைகள் நன்றாக போகின்றன. ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொள்ளவில்லை.

பிற்பகல் 2.15 மணி | CENTAUR / DIE FLUGEL DER MENSCHEN | DIR: AKTAN ARYM KUBAT | KIRGHIZ | 2017 | 89'

செண்டார் ஒரு அமைதியான, சிறிய மற்றும் எளிமையான மனிதர், ஒரு சிறிய பையனின் அன்பான தந்தை ஒரு வார்த்தை மற்றும் வாய்பேச மற்றும் செவிகேளா மாரிபா எனும் இளம் பெண்ணின் கணவராக ஒரு வார்த்தையும் பேசியதில்லை. இவர்கள் அன்புடன் இணைந்து சிறிய வாழ்க்கையை அந்த சின்னஞ்சிறிய கிர்கிஸ்தான் கிராமத்தில் நடத்துகின்றனர். செண்டார் தனது அண்டைவீட்டார்கள் மத்தியிலே மிகவும் மரியாதை மிக்கவனாக விளங்குகிறார். எவரும் சந்தேகப்படாத வகையில் ஒரு குதிரைத் திருடனாகவும் அவர் இருக்கிறார். அதேநேரத்தில் கிர்கிஸ்தான் நாடோடிப் பழங்குடியினரிடையே குதிரைகள் சார்ந்து அவருக்குள் ஆழமாக வேரூன்றிய நம்பிக்கை ஒன்று இருக்கிறது. பொய் நீண்டநாள் நீடிக்கவில்லை. ஒருநாள் உண்மை வெளிப்படும்போது அவர் தனது குடும்பத்தின் விதியை நிர்ணயிக்கும் தேவையை உணர்வது அவர் மட்டுமல்ல அந்தக் கிராம வாசிகளும்.

மாலை 4.45 மணி |THE NOTHING FACTORY / A FABRICA DE NADA | DIR: PEDRO PINHO | POLISH | 2017 | 132'

ஒரு இரவில், ஒரு தொழிலாளி ஒருவர் தமது தொழிற்சாலைகளிலிருந்து இயந்திரங்களை திருடிச்செல்ல ஏற்பாடு செய்திருப்பதை உணர்கிறார். அவை மிகப்பெரிய பணிநீக்கத்தின் முதல் சமிக்ஞையாகும் என்பதை அவர்கள் விரைவில் புரிந்துகொள்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் தனி பேச்சுவார்த்தைகளில் ஒத்துழைக்க மறுக்கின்றனர், அவர்கள் தங்கள் பணியிடத்தை ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றனர். அவர்களது எதிர்பாராத நிலையில் அவர்களது எண்ணத்தை நிர்வாகம் உடைக்கிறது. அவர்கள் தொழிற்சாலை பாதி காலியான நிலையில் தொழிற்சாலையிலிருந்து வெளியேறுகிறார்கள். அவர்கள் சுற்றியுள்ள உலகம் வீழ்ச்சியுற்றதால், புதிய ஆசைகளும் வெளிப்படத் தொடங்குகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x