Last Updated : 21 Dec, 2017 11:09 AM

 

Published : 21 Dec 2017 11:09 AM
Last Updated : 21 Dec 2017 11:09 AM

2ஜி வழக்கில் தீர்ப்பு: சித்தார்த் ட்வீட்டால் சர்ச்சை; ட்வீட்டையும் நீக்கினார்!

2ஜி வழக்கில் அனைவரும் விடுதலையானதைத் தொடர்ந்து, நடிகர் சித்தார்த் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தையும் ட்விட்டர் தளத்திலிருந்து நீக்கினார்.

ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் சம்பந்தப்பட்ட '2ஜி வழக்கு' தீர்ப்பு இந்தியாவில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. அந்த தீர்ப்பு இன்று (டிசம்பர் 21) காலை 11:00 மணிக்கு தீர்ப்பு வெளியாவதாக இருந்தது.

அதற்கு முன்னதாக நடிகர் சித்தார்த், "ராஜா, கனிமொழி நடிப்பில் திருட்டுப்பயலே-1 படத்துக்கான விமர்சனம் இன்று வெளியாகிறது. ஜெயலலிதா, சசிகலா மற்றும் குழுவினர் நடிப்பிலான திருட்டுப்பயலே-2 போலவே இந்த படத்துக்கான தீர்ப்பும் நன்றாகவே இருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், 2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை என்று தீர்ப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து தனது சர்ச்சைக்குரிய ட்வீட்டை நீக்கினார். தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, "சூப்பர் ஹிட் என்ற செய்தி வந்துள்ளது. அனைவருக்கும் விடுதலை. என் இந்தியாவே சிறந்தது. இந்திய அரசியலின் தூய்மையான குற்றமற்ற தன்மைக்கு என் வாழ்த்துகள். எவ்வளவு நற்குணம். இனி #2ஜி கிடையாது. தேசிய கீதம் ஒலிக்கிறது. எழுந்து நில்லுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார் சித்தார்த்.

சித்தார்த்தின் ட்வீட் பெரும் சர்ச்சையாக சமூகவலைத்தளத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x