Last Updated : 06 Dec, 2017 08:30 PM

 

Published : 06 Dec 2017 08:30 PM
Last Updated : 06 Dec 2017 08:30 PM

நிவின்பாலி படத்தில் அமலாபால் விலகல்: ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம்

'காயம்குளம் கொச்சுண்ணி' படத்திலிருந்து அமலா பால் விலகியிருப்பதைத் தொடர்ந்து ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி, அமலா பால் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் படம் 'காயம்குளம் கொச்சுண்ணி'. கோகுலம் கோபாலன் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இதில் நிவின்பாலி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கத் தொடங்கியது படக்குழு.

இந்நிலையில் பல்வேறு படங்களில் நடித்துவருவதால், 'காயம்குளம் கொச்சுண்ணி' படத்துக்கு தேதிகள் ஒதுக்க இயலாததால் விலகிவிட்டார் அமலாபால். இதனைத் தொடர்ந்து நாயகியாக ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'உதயநாணு தாரம்', 'மும்பை போலீஸ்', 'ஹவ் ஓல்ட் ஆர் யு' உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை எழுதிய பாபி மற்றும் சஞ்சய் இப்படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார்கள். பினோத் பிரதான் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் மற்றும் கோபி சுந்தர் இசை என படக்குழுவினர் பணிபுரிந்து வருகிறார்கள்.

'காயம்குளம் கொச்சுண்ணி' 19-ம் நூற்றாண்டில் காயம்குளம் பகுதியில் வாழ்ந்த பழம்பெரும் திருடன் ஒருவரை பற்றிய படமாகும். அத்திருடன் அப்போது வாழ்ந்த செல்வந்தர்களிடமிருந்து பணம் , பொருள் போன்றவற்றை திருடி நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார். அவருடைய குழந்தைப் பருவம் முதல் வறுமை வாட்டியெடுத்தனால் இது போன்ற விஷயங்களில் அவர் ஈடுபடக் காரணம் என்று கூறப்படுகிறது. கேரள வரலாற்றில் இவரை போன்ற அன்பான , பயங்கரமான திருடன் ஒருவன் இன்று வரை இருந்ததில்லை என்பது தகவல். 1859 கொச்சுண்ணி போலீஸாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x