Last Updated : 30 Nov, 2017 05:01 PM

 

Published : 30 Nov 2017 05:01 PM
Last Updated : 30 Nov 2017 05:01 PM

மெர்சல் வசூல் சர்ச்சை: தனஞ்ஜெயனுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

'மெர்சல்' வசூல் தொடர்பாக தனஞ்ஜெயன் தெரிவித்த கருத்துகளுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி கொடுத்துள்ளார்.

அன்புச்செழியன் கைது விவகாரம் தொடர்பாக பேசிய சிலர் "சமீபத்தில் வெளியான 'மெர்சல்' கூட தயாரிப்பாளருக்கு தோல்வி படம் தான்" என்று கருத்து தெரிவித்தார்கள். இதனால் சமூகவலைத்தளத்தில் மீண்டும் 'மெர்சல்' சர்ச்சை உருவானது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ் திரையுலகின் வர்த்தக நிபுணத்துவம் குறித்து எழுதி வரும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். (அவருடைய கருத்தை படிப்பதற்கு). தனஞ்ஜெயனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஸ்.வி.சேகர் கூறியிருப்பதாவது:

இந்தப் படத்தின் மூலம் மிகுந்த லாபத்தை ஈட்டியதாக தயாரிப்பாளர் பகிரங்கமாக தெரிவித்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே. லாபத்தில் நம் அரசாங்கத்துக்கு ஜிஎஸ்டியும் சென்றிருக்கும். இப்போதெல்லாம் சினிமா வெறும் சூதாட்டமாகவே இருக்கிறது. இந்த உண்மையை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்வோம். எதிர்தரப்பிலும் எந்த ஊகமும் வேண்டாம். மார்ச் 31 2018 வரை காத்திருப்போம்.

இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x